புகையிரத்தில் குதித்து நபர் ஒருவர் தற்கொலை

புகையிரத்தில் குதித்து நபர் ஒருவர் தற்கொலைகோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் புகையிரத்தில் குதித்து நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

நேற்று (19) மாலை 6.30 மணியளவில் கொழும்பில் இருந்து பயணித்த இரவு நேர தபால் புகையிரத்திலேயே குறித்த நபர் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

சுன்னாகம் பகுதியை சேர்ந்த 49 வயதுடைய மரியாலின் சகாயநேசன் எனும் நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments :

Powered by Blogger.